கர்ப்பம் என்பது கர்ப்பமுறுதலில் இருந்து குழந்தைப்பேறு வரை உள்ள காலகட்டம் ஆகும். முட்டை விந்தணுவால் சினைப்படுத்தப்பட்ட பின் அது கருப்பையின் உட்புறத்தில் பதியமாகி நஞ்சுக்கொடியாகவும் முளையமாகவும் (முதிராக்கரு) பின் முதிர்கருவாகவும் உருவாகிறது. கர்ப்ப காலம் பெண்ணின் இறுதி மாதவிடாயின் முதல் நாளில் தொடங்கி பொதுவாக 40 வாரங்கள் நீடிக்கின்றன. இது மூன்று மாதங்களை உள்ளடக்கிய மூன்று மும்மாதகாலமாக பகுக்கப்படுகிறது.
9 நிமிடங்கள்: 9 நிமிடங்கள் என்பது ஒரு சுவையான விளையாட்டு அனுபவமாகும். ஒன்பது மாத கர்ப்ப காலம், ஒன்பது நிமிடங்களாகப் பகுக்கப்படுகிறது. உங்களுக்கு வரிசையான வாழ்க்கைத் தேர்வுகள் கொடுக்கப்படும் (உடல், மருத்துவம் மற்றும் சமூக ரீதியாக). வருங்காலத் தாய், ஆரோக்கியமான மகிழ்ச்சியான குழந்தை என்று பலவகையில் இந்த விளையாட்டை 9 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும்.
பொதுவாக கர்ப்ப காலம் மும்மூன்று மாதங்கள் அடங்கிய மூன்று பருவங்களாக பகுக்கப்படுகிறது. மகப்பேறு நிபுணர்கள் ஒவ்வொரு மும்மாதமும் 12 வரங்கள் கொண்டதாக வரையறுக்கின்றனர். ஆக சராசரியான கர்ப்ப காலம் 40 வாரங்களாகும். இது பெண்ணின் உடலியலைப் பொறுத்தது.
கர்ப்ப காலத்தின் முதல் 12 வாரங்கள் முதல் மும்மாதமாகக் கருதப்படுகிறது. உண்மையில் கர்ப்பம் இல்லை எனினும் கர்ப்பத்தின் முதல் இரு வாரங்களில் இருந்து முதல் மும்மாதம் கணக்கிடப்படுகிறது. ஆனால் இவை கருவுறுவதற்கு முன்னான இரு வாரங்களாகும். இவற்றில் பெண்ணின் இறுதி மாதவிடாய் சேர்க்கப்பட்டுள்ளது.
மூன்றாவது வாரத்தில் கருவுறுதலும், நான்காவது வாரத்தில் கருப்பதியமும் உண்டாகிறது. நான்காவது வாரத்தில் சினைப்படுத்தப்பட்ட கருமுட்டை கருப்பையை சென்றடைந்து அதற்குத் தேவையான சத்துணவைக் கொண்டுள்ள கருப்பைச் சுவருக்குள் பதியமாகிறது. பெண்ணுடலின் ஒவ்வொரு மண்டலத்தையும் பாதிக்கும் இயக்குநீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்ப்பமுற்ற முதல் வாரத்திலேயே இம்மாற்றங்கள் அறிகுறிகளை உண்டாக்கலாம். அறிகுறிகளாவன:
பெரும்பாலான பெண்கள் இக் காலகட்டத்தில் தெம்பாக இருப்பர். எடை கூடத் தொடங்கும். காலை சோர்வு போன்ற அனைத்து அறிகுறிகளும் குறைந்து அடியோடு மாறும். தனது இயல்பான அளவை விட கருப்பை கர்ப்பகாலத்தில் 20 மடங்கு வரை விரிவடையலாம்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிக பட்ச எடை கூடுதல் இக் காலகட்டத்தில் உண்டாகிறது. கரு வேகமாக வளர்ந்து ஒரு நாளைக்கு 28 கிராம் வரை கூடும். கரு பிறப்புக்கு ஆயத்தமாகி கீழ் நோக்கி கவிழ்வதால் பெண்ணின் வயிறு மாற்றமடைந்து சரியும்.
குறிப்பு:
http://womenshealth.gov/pregnancy/you-are-pregnant/stages-of-pregnancy.html
பிறப்புக்கு முந்திய பராமரிப்பு கர்ப்ப காலத்தில் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும் முறையான மருத்துவ மற்றும் பிற கவனிப்பை இது குறிக்கிறது. இது ஒரு, வருமுன் காக்கும் கவனிப்பு ஆகும். இதில் முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கர்ப்ப காலம் முழுவதும் வரக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளை இதனால் மருத்துவர்கள் கண்டு மருத்துவம் அளித்து அவற்றைத் தடுக்கக் கூடும். தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை இதன்மூலம் பேணப்படுகிறது. இதில் அடங்குவன:
பிறப்புக்கு முந்திய கண்டறிதலும் பரிசோதனையும்:
பொதுவாக உடல் பரிசோதனையில் அடங்குவன:
இந்திய அரசின் விதிமுறைகள் படிபதிவு செய்யும் முதல் வருகையோடு சேர்த்து ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் குறைந்த பட்சம் நான்கு தடவை பிறப்புக்கு முன்னான சோதனைக்கு மருத்துவரிடம் வருகை தர வேண்டும்.
பரிந்துரை செய்யப்படும் பிறப்புக்கு முந்திய மருத்துவ கவனிப்பு வருகை:
முதல் வருகை: 12 வாரங்களுக்குள் அல்லது கர்ப்பம் என்று ஐயுற்றவுடன்
இரண்டாவது வருகை: 14-26 வாரங்களுக்கு இடையில்
மூன்றாவது வருகை: 28-34 வாரங்களுக்கு இடையில்
நான்காவது வருகை: 36 லிருந்து இறுதி வாரம் வரை
கேளா ஒலி:இரண்டாவது மும்மாதத்தில் ஏறத்தாழ 20 வாரத்தில் பொதுவாக மகப்பேற்று கேளாஒலி சோதனை செய்யப்படுகிறது. இது பாதுகாப்பான தாகும். கர்ப்பத்தைக் கண்காணிக்க 35 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கேளா ஒலி கீழ்வருவனவற்றிற்கும் பயன்படுகிறது:
பொதுவாகக் கேளா ஒலி சோதனை அசாதாரண நிலைகள் என ஐயுறும்போதோ அல்லது கீழ்வரும் அட்டவணைப்படியோ நிகழ்த்தப்படும்:
http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003778.htm
பிறந்த நேரத்தில் கர்ப்பகால பாதுகாப்பு
கீழ்க்காணும் பிரச்சினைகள் பற்றி பெண்களுக்கு ஆலோசனை கூற வேண்டும்:
அனைத்துக் கர்ப்பிணிகளையும் மருத்துவ மனைப் பேற்றையே நாட ஊக்கப்படுத்த வேண்டும்.
ஒரு சுகாதார நிலையத்தில் ஏன் குழந்தைப் பேற்றை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பெண்ணுக்கு விளக்கி கீழ்க்காண்பவற்றை வலியுறுத்த வேண்டும்:
கர்ப்ப காலத்தில் வயிற்றில் உண்டாகும் அசௌகரியங்கள் இயற்கையே. அதில் தீங்கு எதுவும் இல்லை. கடுமையானதும் தொடர்ந்து இருப்பதுமான வயிற்றுவலியை அலட்சியப் படுத்தக் கூடாது.
வயிற்று வலியுடன் வெள்ளைபடுதல், இரத்தப்போக்கு, காய்ச்சல், குளிர், பிறப்புறுப்புக் கசிவு, மயக்கம், சிறுநீர் கழிக்கும்போது சிரமம் ஆகியவற்றுடன் ஓய்வுக்குப் பின்னும் வலி குறையாமல் இருந்தால் மருத்துவரை நாட வேண்டும்.
இடம் மாறிய கர்ப்பம்
சினைப்படுத்தப்பட்ட முட்டை கருப்பைக்கு வெளியே, பொதுவாக கருமுட்டைக் குழாய் ஒன்றில் பதியம் ஆகும்போது இடம் மாறிய கர்ப்பம் உண்டாகிறது. ஆரம்ப கட்டத்தில் பிடிப்பு போன்ற சில அறிகுறிகளை ஏற்படுத்தும்.
சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இது மிகவும் உயிருக்கு ஆபத்தான ஒன்றாகும். கீழ்வரும் அறிகுறிகளில் ஏதாவது தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்:
கர்ப்பம்கலைதல்
முதல் 20 வாரங்களுக்குள் கரு கலைதலே கர்ப்பம் கலைதல் ஆகும். பிறப்புறுப்பு கசிவு அல்லது இரத்தப்போக்கே முதல் அறிகுறி. அதற்குப் பின் சில மணி நேரம் அல்லது சில நாட்கள் தொடர்ந்து வயிற்று வலி.
இரத்தப் போக்கு குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம். வலி தசைப் பிடிப்பு போன்றோ தொடர்ந்தோ, குறைவாகவோ அல்லது கடுமையாகவோ, பின்முதுகு அல்லது இடுப்பு அழுத்தம் போலவோ இருக்கும்.
குறைப் பிரசவம்
கருவுற்று 37 வாரத்துக்கு முன் ஏற்படும் பிரவசம்.
நச்சுக்கொடி முறிவு
பிறப்புக்கு முன் நச்சுக்கொடி கருப்பையில் இருந்து தனியாகப் பிரியும் ஆபத்தான நிலையே நச்சுக்கொடி முறிவாகும்.
அறிகுறிகள் பல்திறப்பட்டன. சில சமயம் திடீர் வெளிப்படையான இரத்தப்போக்கு இருக்கும். சில நேரங்களில் முதலில் வெளிப்படையான இரத்தக்கசிவு இருக்காது அல்லது சிறிதளவு கசிவும் இரத்தப்போக்கும் இருக்கும்.
சிறுநீர்ப்பாதைத் தொற்று
சிறுநீரகத் தொற்று முதற்கொண்டு கர்ப்ப காலத்தில் அனைத்து சிறுநீர்ப்பாதை தொற்று நோய்களும் ஏற்படும்.
சிறுநீர் கழிக்கும்போது வலி, அசௌகரியம் அல்லது எரிச்சல், இடுப்பில் அசௌகரியம் அல்லது கீழ்வயிற்று வலி (பெரும்பாலும் இடுப்பு எலும்புக்கு மேல்), சிறுநீர்ப் பையில் மிகக் குறைவாக சிறுநீர் இருந்தாலும் அடிக்கடியும் தவிர்க்கமுடியாத படியும் சிறுநீர் கழிக்கும் உணர்வு, கலங்கிய, துர்நாற்றத்துடன், குருதியுடன் சிறுநீர் ஆகியவையே சிறுநீர்ப்பைத் தொற்றின் அறிகுறி.
பிற காரணங்கள்
வயிற்று வலிக்குப் பிற காரணங்களும் உண்டு. வயிற்று வைரஸ், நச்சுணவு, குடல்வால் அழற்சி, சிறுநீரகக்கல், கல்லீரல் அழற்சி, பித்தப்பை நோய், கணைய அழற்சி, நார்த்திசுக்கட்டி, குடல் அடைப்பு ஆகியவை பரவலான காரணங்கள் ஆகும்.
கர்ப்ப காலமே தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் குறித்துத் தாய்க்கு ஆலோசனை கூறத் தகுந்த நேரமாகும். இந்தியாவில் தாய்ப்பாலூட்டல் பரவலாக இருந்தாலும் பின்வரும் செய்தியைத் தாயாகப் போகிறவர்களுக்குத் தர வேண்டும்.
பிறந்தவுடன், குறிப்பாக ஒரு மணி நேரத்துக்குள், அறுவை மூலம் பிறப்பாக இருந்தாலும், தாய்ப்பால் ஊட்டுவது சிறந்ததாகும்.
கர்ப்ப காலத்தில் சரியான உணவு முறையில் இருந்து உடல்நலம் பேணுதல் மற்றும் ஆரோக்கியமாக இருத்தல் வரை அனைத்தும் உடற்தகுதியோடு கைகோர்த்துச் செல்கிறது. ஆரோக்கியமான கர்ப்பிணிப்பெண் ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரம் மிதமான உடல் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்தில் உடல் செயல்பாடுகளால் விளையும் சிறப்பான நன்மைகள்:
உடற்தகுதிக்கான திட்டத்தைத் தேர்ந்து எடுக்கும்போது கீழ்வரும் குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்:
http://womenshealth.gov/pregnancy/you-are-pregnant/staying-healthy-safe.html
பாதுகாப்பான ஆரோக்கியமான உடற்பயிற்சிக்குப் பின் வரும் குறிப்புகளைக் கடைபிடிக்கவும்:
கீழ்வருவனவற்றில் ஏதேனும் ஏற்பட்டால் உடல்பயிற்சியை நிறுத்திவிட்டு உடனே மருத்துவரை அணுகவும்:
http://womenshealth.gov/pregnancy/you-are-pregnant/staying-healthy-safe.html
மலக்குடல், பிறப்புறுப்பு, சிறுநீர் வடிகுழாய் ஆகியவற்றை இடுப்புத் தளத் தசைகள் தாங்குகின்றன. இத் தசைகளை வலுப்படுத்தி பிரசவத்தின் போது உந்தவும், பிரவசத்துக்குப் பின் மீளவும், கெகல் உடல்பயிற்சி துணைபுரியும். சிறுநீர்ப்பை கசிவையும் மூலநோய் அபாயத்தையும் கட்டுப்படுத்தவும் இது உதவி செய்யும்.
இடுப்புத்தள தசைகள்தான் சிறுநீர்ப்போக்கைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் சுருக்க வேண்டிய சரியான தசையைக் கண்டு பிடிப்பது கடினமாகும். சிறுநீர்க் கழிப்பதைத் தடுக்கும் தசையே சரியான தசை என உடற்பயிற்சி செய்யும்போது உறுதியாக இருக்கலாம். அல்லது பிறப்புறுப்பில் ஒரு விரலை வைத்துக்கொண்டு சுருக்கவும். விரலைச் சுற்றி அழுத்தத்தை உணர்ந்தால் இடுப்புத் தள தசையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். வயிறு, கால்கள் அல்லது பிற தசைகளைக் கட்டிப்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
கெகல் உடற்பயிற்சி என்றால் என்ன?
குறிப்புகள் :
http://www.mayoclinic.com/health/kegel-exercises/WO00119
http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003975.htm
சுற்றுச் சூழல் ஆபத்து
நாம் வீட்டிலோ, வேலையிலோ அல்லது வெளியிலோ இருக்கும்போது நம்மைச் சுற்றி இருக்கும் யாவுமே சுற்றுச்சூழல் ஆகும். நீங்கள் சுவாசிக்கும் அல்லது உட்கொள்ளும் ஒவ்வொரு சிறுசிறு விஷயத்தையும் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும், உங்கள் கர்ப்பத்தை அல்லது பிறக்காத சிறுகுழந்தையைப் பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும்.
கர்ப்ப காலத்தில் கீழ்வருவனவற்றைத் தவிர்க்கவும்:
எவ்வளவு தூரத்திற்கு இவை கர்ப்பக் கலைவு அல்லது பிறப்புக் குறைபாடுகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரியாத நிலையில் எவ்வளவு தூரத்திற்கு முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு இவற்றின் தாக்கத்தில் இருந்து தப்புவது நல்லது. இதோ சில எளிதான அன்றாடக பாதுகாப்பு முறைகள்:
பணிபுரியும் இடத்தில் வேதிப்பொருட்களின் தாக்கம் இருந்தால் மருத்துவரிடமும் நிர்வாகியிடமும் கலந்து பேசி தாக்கத்தைக் குறைக்கும் வழிகளைக் காணவேண்டும். உலர்சலவை, உற்பத்தி, அச்சு, வேளாண்மை சார்ந்த சில தொழிலகங்கள் ஆபத்து விளைவிக்கும் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தும்.
புகைத்தலைத் தவிர்த்தல்
புகைத்தல் ஆரோக்கியத்துக்குக் கேடானது. குழந்தையின் நலத்தையும் பாதிக்கும். புற்று நோயையும் இதய நோய்களையும் உண்டாக்குவது மட்டுமன்றி கர்ப்ப காலத்தில் புகைப்பதனால், பிறக்கும் குழந்தை எடை குறைந்து காணப்படும். எடை குறைந்து பிறக்கும் பிள்ளைகளின் உடல்நலம் பிறப்புக்குப் பின் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கர்ப்ப காலத்தில் புகைக்கும் பெண்களுக்கு பிற பெண்களைவிட கர்ப்ப கலைவு மற்றும் பிறக்கும் குழந்தைகள் பிறப்பு குறைபாடுகளான உதட்டு, அண்ணப் பிளவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் கர்ப்ப காலத்திலும் பேறுகாலத்திற்குப் பின்னும் புகைபிடிக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகளை சிசு மரணம் எனும் அபாயத்துக்கு உட்படுத்துகிறார்கள்.
போதைப்பொருள்
கர்ப்ப காலத்தில் மது மற்றும் சட்ட விரோதமான போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆபத்தை விளைவிப்பதாகும். அது போலவே சட்டத்துக்கு உட்பட்ட மருந்துகளைத் தவறாக பயன்படுத்துவதும். மதுவையும் போதைப்பொருளையும் பயன்படுத்தும்போது, இரத்ததில் கலப்பதும் நுரையீரலுக்குள் நுழைவதுமான வேதிப்பொருட்கள் நச்சுக்கொடியை ஊடுறுவி குழந்தைக்குள் புகுகிறது. இதனால், இறந்துபிறத்தல், எடைகுறைவாக பிறத்தல், பிறப்பு குறைபாடுகள், நடத்தைப் பிரச்சினைகள், வளர்ச்சி தேக்கம் போன்ற ஆபத்துக்களை குழந்தைகள் எதிர்கொள்ளுகின்றன.
மது
ஒரு கர்ப்பிணிப்பெண் மது அருந்துகிறார் என்றால் குழந்தையும் மது அருந்துகிறது என்று அர்த்தம். கர்ப்பிணிப்பெண் கருவில் மதுவால் ஏற்படும் கோளறுகளைத் தவிர்க்க மது அருந்தக்கூடாது. இதன் விளைவு குறைவாகவோ கடுமையாகவோ இருக்கும். முகத்தில் கோளாறு, கல்வித்திறன் குறைவு போன்ற பல பிரச்சினைகளோடு குழந்தை பிறக்கக் கூடும்.
கர்ப்பமாக இருக்கும் போது, உங்களுக்கு நெருடலாகவோ அல்லது கவலை தருவதாக எது ஒன்று இருந்தாலும் மருத்துவரையோ செவிலியரையோ அழைக்கத் தயங்க வேண்டாம். உடல் மாற்றங்கள் சில வேளைகளில் பிரச்சினைகளுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
கீழ்வரும் நிலைகளில் மருத்துவரையோ மருத்துவப் பணிப்பெண்ணையோ அழைக்கவும்:
28 வார கர்ப்பத்திற்குப் பின் குழந்தையின் அசைவு இயல்பை விட குறைவாக இருந்தால் சந்தேகப்பட வேண்டும் (2 மணி நேரத்தில் 10 அசைவை விட குறைவாக)